ஒரு நல்லிணக்க முயற்சி என்று பொத்தாம்பொதுவாகக்கூறி கடந்து செல்ல இயலாத அளவுக்கு காத்திரமான கதைகளால் மற்றவர்களின் சிலுவையைக் கோர்த்திருக்கிறார் அருட்தந்தை மரிய தனராஜ்.ரோம் நகரில் இறையியல் பயின்று மதுரையில் வாழும் இவர் தனது துறவு வாழ்வினூடாக ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும் அவதானிப்பும் கொண்டவர். எக்காலத்தும் நிலைத்திருக்கும் முக்கிய ஆவணத்தைத் தமிழுக்குத் தந்துள்ளதன் மூலம் இலக்கியத்தில் கால் பதிக்கும் அருட்தந்தையை அறிவுலகம் வரவேற்கட்டும்.
கீரனூர் ஜாகிர்ராஜா