எளிய மனிதர்களின் வாழ்வியல் போராட்டங்கள், முயற்சி திருவினையாக்கும், உழைத்தால் உயரலாம் எனும் தத்துவங்கள் பெரும்பாலான கதைகளின் மையமாக உள்ளது. கதைகளில் வரும் பெண்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், திறன்மிக்கவர்களாகவும், கணவர்களை வழிநடத்துபவர்களாகவும், காதல் மணம் புரிந்தவர்களாகவும் இருப்பது வாசிப்பவர்களுக்கு பிடித்தமான அம்சமாக இருக்கும்.
-ந.பெரியசாமி, ஓசூர்
கணவன், மனைவி இருவரின் நெருக்கமான அன்புப் பகிர்தலை திகட்டத் திகட்ட தருகிற கதை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் செலுத்த வேண்டிய அன்பின் பேரவசியம் இப்படியாக பத்தொன்பது கதைகள் பலரின் வாழ்வைச் சுட்டிக்காட்டுகிறது. நிழல் தேடும் நிழல்களும் நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கிற பேரன்பை வெளிப்படுத்துகின்றது.
க.அம்சப்ரியா, எழுத்தாளர், பொள்ளாச்சி