முழுமையான மனித சுதந்திரம் என்பது ஒரு போதும் சாத்தியமில்லை. சமூகத் தடைகளும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளும் சமய அதிகாரமும் இருக்கும் வரை மனிதர்கள் பிளவுபட்டுதானிருப்பார்கள், கலை இலக்கியத்தின் வேலை இந்த நெருக்கடிக்குள் மனிதர்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்கிறார்கள். சகமனிதன் மீது அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்டுவதே என்கிறார் செகாவ்.
ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.