ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ, பால்சாக், பாஷோ, ஒனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
உலக இலக்கியமெனும் நெடும் பாதையில் பயணித்துத் தனித்துவமிக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நோவாவின் புறாவைப் போன்று புதியதொரு நம்பிக்கையின் இலைகளை அலகில் கொண்டுவந்து சேர்ந்திருக்கின்றன இக்கட்டுரைகள்.