
ஒரு கவிதை நீ - Oru Kavithai nee
Product Details
நம் விரல்கள் கட்டியணைத்த தருணம்
நிஜம் கூட தள்ளிப் போய் இளைப்பாறும்
உலகமே ஒரு நொடி வேகமெடுக்கும்
உன்னதமே உனதென்று உயிர்மழை பொழியும்
பகலவனும் பாதி மங்கும்
பனைமரக்காற்றும் காடு சூழும்
ஒய்யாரமாய் குயிலும் பாடி திரியும்
ஒற்றைக் கண்ணீரும் நீ தொட்டால் குளமாகும்
உனை நினைக்கையிலே உயிரும் உச்சம் தொடும்
உனை அணைக்கையிலே பொன்னிற்கும் பொறாமை வரும்
உன் கால் விரல்பட்டால் குளத்தங்கரையும் குத்தாட்டமிடும்
உன் கணுக்கால் தெரிந்தால் குளத்து மீனும் குதூகலமாகும்
உன் கொலுசொலியிலே காடெல்லாம் கனவுகள் காணும்
உன் கண்ணொளியிலே மின்னொளியும் மங்கிப் போகும்
உன் கால் சேர கடல் அலையும் அமைதி களையும்
உன்னுடன் அமர்ந்து பேச காற்றும் கட்டாந்தரை தேடும்
தமிழ் – காதல் – மழை – கவிதை – காதலர்கள்
இவர்கள் தான் இந்தப் புத்தகத்தின் கதாபாத்திரங்கள்.
வாருங்கள் அவர்களோடு சேர்ந்து நாமும் நனைவோம்
இந்த காதல் மழையில்



