1966இல் வெளிவந்த 'ஒரு புளியமரத்தின் கதை' ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. இந்நாவல் அளவுக்குத் தமிழ் வாசகர்களின் உயர் ஆதரவைத் தொடர்ந்து பெற்றுவரும் இன்னொரு படைப்பு தமிழில் இல்லை. மலையாளத்திலும் இந்தியிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் 'நவீன கிளாசிக்' வரிசையில் வெளியிட்டுள்ளது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையைப் பெற்றது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே.எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசு பெறத் தகுதியானதெனக் குறிப்பிடுகிறார். தற்போது அமேசான் கிராசிங்கின் ஆங்கிலப் பதிப்பாக 'ஒரு புளியமரத்தின் கதை' உலக அரங்கில் வாசகர்களைச் சென்றடைந்துள்ளது.
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.