"ஒருவனுடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கு அஸ்தி வாரமாகத் திகழ்பவள் ஒரு பெண்-அதாவது அவன் மனைவி. "There is a women behind every successful man" 25 பழமொழி. அதைப்போல, ஒரு காவியத்தின் வெற்றிக்கு அடிநாதமாகத் திகழ்பவர்கள் அதில் வரும் பெண்கள். இதன் காரணமாக வே, கம்பன் அவனுடைய காவியத்தில் பெண்களைப்பற்றி அற்புதக் கோலமிட்டுள்ளான். கம்பன் எந்த நோக்குடன் இராமகாவியத்தில் பெண் களைப் பார்த்திருக்கிறான்? எப்படியெல்லாம் சித்திரித்திருக் கிறான்? காவியத்தில் வரும் பெண்பாத்திரங்களின் முக்கியத் துவம் என்ன? என்பதை எல்லாம் மிகவும்அற்புதமாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் உயர்திரு. சாண்டியல்யன் அவர்கள். இதைப் படிப்பதால் தமிழ் மக்களுக்குப் பயன்கள் பல உண்டு. காவியத்தில் புதைந்து கிடக்கும் நுட்பங் களை ஓவியத்தில் புனைந்து காட்டி விளக்குவதைப்போல் பெண் பாத்திரங்கள் இடம் பெறும் பாடல்களை அற்புதமாக விளக்கிக் காட்டுகிறார். அவருடைய விளக்கங்களைப் படிக்கும்பொழுது, காவியம் முழுவதையும் ஊன்றிப் படிக்க வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது. கம்ப இராமாயணத்துக்கு எத்தனையோ ஆய்வு நூல்கள் வந்திருக்கின்றன. என்றாலும், கம்ப இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பெண்களுக்கென்று தமிழில் வரும் முதல் திறனாய்வு நூல் 'கம்பன் கண்ட பெண்கள்' என்ற இந்த நூல்தான்
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.