அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியளித்து ஆளுகின்ற அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள் பன்முகத்தன்மை என்ற அடித்தளத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்ட இந்திய ஒன்றியத்தை இன்றைக்கு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் என சனாதன சித்தாந்தவாதிகளின் ஒரு நூற்றாண்டுக் கனவினை மெல்ல மெல்ல நினைவாக்கிட பெரும் வீரியத்தோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேசத்தை இந்து தேசமாக்கிட முயல்கிறார்கள்.
தன் காலம் முழுவதும் இடையறாது நிகழ்த்திய ஆய்வுகளின் வழியாக அறிவுத்தளத்தில் இவர்களை அம்பலப்படுத்திய அம்பேத்கரையே இன்றைக்கு தங்களுக்கு உரியவர் என்பது போல உருமாற்றம் செய்யும் முயற்சியையும் காவிமயமாக்கும் சூழ்ச்சியையும் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.
இந்தியாவையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற சனாதன முன்னெடுப்புகளை எதிர்கொண்டு வென்றிட நாம் அறிவாயுதம் ஏந்துவது அவசியம். அப்படியான அறிவாயுதங்களில் மிக மிக முக்கியமானதும் அவசியமானதும் அம்பேத்கர் நமக்கு வழங்கியிருக்கிற 'The Buddha and His Dhamma'.
வளவன் பெரியார்தாசன்
பதிப்பாசிரியர்